இழுவைப் படகுகளுக்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் – சுமந்திரன்

226 0

இழுவைப் படகுகளுக்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தனிநபர் பிரேரணையை சுமந்திரன் இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.

குறித்த பிரேரணை அரசாங்க பிரேரணையாக மாற்றப்பட்டு, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 17ஆம் திகதி அது நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு இந்த மாத இறுதியில் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.