இலங்கை கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் கடத்தப்பட்டுள்ளது.

223 0

இலங்கை கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்று சோமாலிய கடற்பரப்பில் வைத்து கடத்தப்பட்டுள்ளது.

டுபாய்க்கு சொந்தமான ஏரிஸ் 13 என்ற இந்த கப்பலின் தொடர்பு சாதனங்கள் எவையும் தற்போது இயங்காதுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இது உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் கடத்தப்படும் முதலாவது வர்த்தக கப்பலாக இது இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.