வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய வத்தளை, குடா தண்டாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 217 கிராம் ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.
கைதானவர்கள் 26, 32 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் ஹெந்தலை மற்றும் வத்தளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை 7 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

