கிளிநொச்சி – பளை பகுதியில் நடந்த விபத்தில் முல்லைத்தீவை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் மரணம்.!

106 0

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி பளை – இத்தாவில் பகுதியில் இன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த கயஸ் வான் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியை சேர்ந்த 39 வயதுடைய எம்பெருமாள் குமரவேல் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஜெகதீஸ்வரன் காவியா.