வவுனியா, தோணிக்கல் பகுதியில் இன்று கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல்,லக்சபான வீதியில் பராமரிப்பு அற்ற காணியை துப்பரவு செய்த போது கைக்குண்டு ஒன்று காணப்பட்டதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த காணிக்கு சென்று குறித்த கைக்குண்டை மீட்டெடுத்துள்ளனர்.
குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அவர்கள் கைக்குண்டை பாதுகாப்பான முறையில் அங்கிருந்து அகற்றியுள்ளனர்

