கடமை நேரம் 12 மணித்தியாலங்களாக அதிகரிப்பு!

138 0

தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறை யிலிருக்கும் தொழிலாளர் சட்டத்தை முழுமையாக மீறும் வகையிலேயே இந்தச் சட்டத் திருத்தங்களுக்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனூடாக தனியார் தொழிற்சாலை நிர்வாகங்கள் அவர்களுக்கு ஏற்றவாறு தீர்மானங்களை எடுக்க முடியும் என்பதுடன் 08 மணித்தியால கடமை நேரம் 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இவ்வாறு அநீதியான முறையில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியது என்றும் கடமை நேரத்தை 12 மணித்தியா லங்களாக அதிகரிப்பதற்கு இடமளிக்க போவதில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், தொழிலாளர் சட்டத்தை திருத்துவது தொடர்பில் அரசாங்கத்தால் யோசனையொன்று முன்வைக்கப் பட்டுள்ளது. சாதாரண தொழிலாளர்களுக்கு அநீதி ஏற்படும் வகையிலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில்புரியும் இடங்களில் சேவையாற்றுவ தற்காக தொழிலாளர்களுக்கு இருக்கும் உரிமை, தேவையான நேரத்தில் அவர்கள் வெளியேற்று வதற்கு இருக்கும் உரிமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை முழுமையாக ஓரங்கட் டிவிட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை உருவாக்கும் நிலைமையே இதனூடாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்புரியும் தொழிற்சாலைகளின் பிரதானி களினால், தொழிலாளர்களுடன் தனியான ஒப்பந்தமொன்றை மேற்கொள்ளக் கூடியவாரான ஏற்பாடுகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அந்த ஒப்பந்தங்களில் தொழிலாளர்கள் கட்டாயம் கையொப்பமிடவேண்டி ஏற்படும். அதில் கையொப்பமிட்டதன் பின்னர் சாதாரண தொழிலாளர் சட்டம் நடைமுறையில் இருக்காது.

எனவே, அதனூடாக தொழிலாளர்களை அவர்களுக்கு தேவை ஏற்படும் நேரத்தில் தொழிற்சாலையிலிருந்து நீக்குவதற்கும் அவர்களுக்கு ஏற்றவாறு தொழில்புரியும் காலத்தை தீர்மானிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

குறிப்பாக, பல்வேறு போராட்டங்களின் பின்னரே தற்போது நடைமுறையில் இருக்கும் 08 மணிநேர பணியை பெற்றுக்கொண்டோம்.

அவ்வாறு இருக்கையில், தேவை ஏற்படும் பட்சத்தில் 12 மணிநேரம் சேவையாற்றுவதற்கான உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த யோசனையில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன.

இந்த யோசனைகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், 08 மணிநேர தொழில்புரியும் காலத்தை பாதுகாப்பதற்கு எங்களால் முடிந்த சகல முயற்சிகளையும் எடுப்போம் என்றார்.