படகு விபத்தில்  உயிரிழந்த யாழ்.இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

75 0

கனடா – ஒன்றாரியோ, கஷேசெவான் பகுதியில் இடம்பெற்ற  படகு விபத்தில்  உயிரிழந்த யாழ்.இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோவில் அவசர மருத்துவ உதவியாளராக பணியாற்றி வந்த  ஈழத்தை சேர்ந்த  அர்ஜனன் சிவசத்தியராஜா என்ற இளைஞன் கடந்த மூன்றாம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் மாயமாகியிருந்தார்.

குறித்த இளைஞரை தேடும் நடவடிக்கையில் 20 படகுகளும் 50 தனி நபர்களும் ஈடுபட்டிருந்ததுடன், ஒன்றாரியோ மாகாண பொலிஸாரும் தேடுதல் முயற்சிக்கு உதவியிருந்தனர்.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.