வடமாகாணசபை உறுப்பினரின் பிரேரணையை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்!

263 0

வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்துள்ளார்.

வடமாகாண சபையின் விசேட அமர்வு இன்று நடைப்பெறுகிறது. இந்த நிலையிலேயே தவநாதன் பிரேரணையை கிழித்தெறிந்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினால் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த கோரி கடந்த 86 ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்திருந்தார்.

எனினும் இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி கூட்டத்தில் பேசியதன் பின்னர் 14 ஆம் திகதி விசேட அமர்வை நடத்தி ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்போது சிவாஜிலிங்கம் தனது பிரேரணையை சபையில் முன்மொழிந்தார். இதன்போது ஆளுங்கட்சியினரும், எதிர்கட்சியினரும் சிவாஜிலிங்கத்தின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்போது, சிவாஜிலிங்கம் கடந்த 86 ஆம் அமர்வில் முன்மொழிந்த பிரேரணை வேறு, இன்றைய தினம் முன்மொழியும் பிரேரணை வேறு என எதிர்க்கட்சி உறுப்பினர் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் சிவாஜிலிங்கம் பிரேரணையை மாற்றியமை தவறான முன்னுதாரணம் என குற்றம்சாட்டியதுடன், சிவாஜிலிங்கம் சபையை அவமதித்துள்ளதாக கூறி சிவாஜிலிங்கத்தின் பிரேரணையை சபையில் வைத்தே கிழித்து எறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.