உந்துருளியில் கஞ்சா கொண்டு செல்வதாக அம்பாறை ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு நேற்று இரவு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றவளைப்பில் சந்தேக நபர் உந்துருளியை கைவிட்டு தப்பி சென்றுள்ள நிலையில், அதில் இருந்த பையில் 4 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கையடக்க தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் உந்துருளி மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் சம்மாந்துறை காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.