பேராதனை பல்கலையில் தற்கொலைக்கு முயற்சித்த மட்டக்களப்பு மாணவன்!

92 0
பேராதனை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விடுதியில் வைத்து தற்கொலை செய்துகொள்ள முற்பட்டதாகவும், அவரை உடனடியாக சில மாணவர்கள் மீட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த இந்த மாணவன் சுயநினைவின்றி இருந்தபோது, பக்கத்து அறையில் இருந்த மாணவர்கள்  அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிப்பதற்கு பல்கலைக்கழக பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.