ஐந்து வருடங்களில் இலங்கையில் ஏற்பட்ட அதிக வறட்சியின் காரணமாக, 9 லட்சம் பேர் வரையில் உணவுப் பாதுகாப்பு இல்லாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்டம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த ஆண்டு நெல் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தொண்டு மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கணிப்பீட்டின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை இந்த மாத இறுதியில் வெளியாக்கப்படவுள்ளது.