ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா

256 0

1917 ஆம் ஆண்டின் மாபெரும் ரஷ்ய புரட்சியின் நூற்றூண்டு விழா நேற்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதனை இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிரதமர், புரட்சியால் வெற்றி பெற்ற தேசிய அரசாங்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்ல வேண்டுமானால் சில சந்தர்ப்பங்களில் மெதுவாக பயணிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்