இந்தியாவின் பிரபல பயண முகவர் நிறுவனமான இந்திய பயண முகவர் சங்கத்தின் 67ஆவது மாநாடு வியாழக்கிழமை (06) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,
இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவும் , இந்திய மக்களும் சகல வழிகளிலும் பங்காளிகளாக இருப்பர். இந்திய பயண முகவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதாக அமையும் என்று நம்புகின்றேன்.
மதம் , கலாசாரம் , ஜனநாயகம் , மொழி என பல்வேறு துறைகளில் இலங்கை மற்றும் இந்தியா ஒருமித்த பண்புகளைக் கொண்ட நாடுகளாகக் காணப்படுகின்றன.
இவ்வாறான மாநாடுகள் , சுற்றுலாக்களின் மூலம் பெருமளவான இந்தியர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் ஊடாக மேற்கூறப்பட்ட காரணிகளின் முக்கியத்துவத்தை உணர முடியும் என்பதோடு , அவற்றை மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை வலுப்படுத்த இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கன.
கடந்த 5 மாதங்களாக யாழ்ப்பாணம் மற்றும் சென்னைக்கிடையில் வாரத்துக்கு 4 விமானங்கள் இருவழி பயண சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
குறித்த விமான சேவையை எதிர்வரும் 16ஆம் திகதி முதல் தினமும் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு இந்தியா அதிகளவான ஒத்துழைப்புக்களை வழங்குவதன் ஊடாக , ஏனைய நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பும் ஏற்படும்.
அது மாத்திரமின்றி இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புக்கள் டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக மேம்படுத்தப்பட வேண்டும். அந்த வகையில் இந்திய பயண முகவர் சங்கத்தினால் இவ்வாறானதொரு மாநாட்டை ஒருங்கமைத்தமைக்கு மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

