ஹொரணை – மொரகஹஹேன – வீதியகொட – ஹாலபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் இருந்து ஆசிரியை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை காவற்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வந்த தகவலுக்கு அமைய கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சடலம் 58 வயதான பெண்ணொருவரது என காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டின் பின்புறத்தில் கயிற்றால் இந்த சடலம் கட்டப்பட்டு இருந்ததாக காவற்துறை மேலும் குறிப்பிட்டுள்ளது.