சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அண்மைக்காலத்தில் பள்ளிவாசலின் படத்தைப் போட்டு சட்டத்திற்கு முரணான முறையில் தனிநபர் ஒருவரால் முகப்புத்தகத்தில் (Facebook) பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலின் படத்தினை பெரிய பள்ளிவாசலின் அனுமதி இல்லாமல் தனிநபர் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு மீறி பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

