இந்தியாவும் வியட்நாமும் கடந்த சில வருடங்களாக தங்கள் உறவுகளை வலுப்படுத்தி வருகின்றன. இரு நாடுகளும் அதிகரித்து வரும் உறுதியான சீன அத்துமீறல்கள் குறித்து கவனம் செலுத்தி வருவதால் தங்கள் நாடுகளினது பாதுகாப்பிலும் சிறப்பு கவனம் செலுத்துகின்றன.
இந்தியா கடந்த காலங்களில் மாலத்தீவு, மொரிஷியஸ் போன்ற நாடுகளுக்கு சிறிய படகுகள் மற்றும் இராணுவ உபகரணங்களையும், மியன்மாருக்கு நீர்மூழ்கிக் கப்பலையும் வழங்கியுள்ளது.
ஆனால், வியட்நாமுக்கான கொர்வெட் கப்பல் மீது தென் சீனக் கடலில் உரிமைகோரல்களைக் கொண்ட சீனாவுக்கு எதிராக போராட பல நாடுகள் பிராந்தியத்தில் ஒன்றிணைந்துள்ள நிலையில், அண்டை நாட்டுக்கு போர்க்கப்பலை இந்தியா வழங்கியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.
சீனா பல ஆண்டுகளாக முழு தென் சீனக் கடல் மீதும் இறையாண்மையை கோருகிறது. அத்தோடு, அப்பகுதியில் மற்ற இராணுவங்களின் இருப்பை உணர்ந்து வருகிறது.
இந்திய கடற்படை ஒரு அறிக்கையில், கிர்பான் கப்பலின் பரிமாற்றமானது, ‘ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களின் திறன் மற்றும் திறனை மேம்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது’ என கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

