கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ‘பொத்துவில களுவா’ கைது!

142 0

பல வீடுகளில் இடம்பெற்ற  கொள்ளைச்  சம்பவங்களுடன் தொடர்புடைய “பொத்துவில களுவா” களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொத்துவில களுவா என அழைக்கப்படும் நபர் பல வீடுகளில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 22 வயதுடையவர்.

வெசாக் வாரத்தில் சந்தேக நபர் பல வீடுகளை உடைத்து சொத்துக்களை திருடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான திருடப்பட்ட சில பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.