நாணயம் சிக்கி குழ​ந்தை உயிரிழப்பு

198 0
இரண்டு வயது சகோதரனுடன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது தொண்டையில் நாணயம் சிக்கி  இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவமொன்று  திங்கட்கிழமை ( 03) தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

சகோதரர்கள் இருவரும்  வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் ​​மூத்த பிள்ளை தனது சகோதரி  வாயில் நாணயத்தை திணித்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறிப்பிட்ட குழந்தையை  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மூச்சுக்குழாய் அடைப்பு காரணமாக மரணம் ஏற்பட்டதாக தடயவியல் நிபுணர் மருத்துவ அறிக்கையை  சமர்ப்பித்துள்ளதாக   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.