காதலியைத் தாக்கிய கிளிநொச்சியில் பணி புரியும் பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நிறுத்தம்!

167 0
தனமல்வில, ரணவர பிரதேசத்தில் வசிக்கும் யுவதி ஒருவரின் வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்து யுவதியை உதைத்து காயப்படுத்திய குற்றச்சாட்டுக்கு உள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் காதலி என கூறப்படும் யுவதி ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.