ஆறு மாதங்களில் டெங்கு நோய்க்கு இலக்காகி 31 பேர் பலி

154 0

இவ் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் 439 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆறு மாதங்களில் மொத்தம் 49,759 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேல் மாகாணத்தில் 24,837 நோயாளர்கள் வைத்தியசாலையில் இருப்பதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுகாதார அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 61 சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளை டெங்கு அபாய பகுதிகளாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.