ஜெனீவாவில் 2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது விசேட நீதிமன்றப் பொறிமுறையாகும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுசரனையோடு கலப்பு நீதிமன்ற பொறிமுறைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்ளகப் பொறிமுறையுடன் கூடிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறையாகும் குறித்த கலப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுநர்கள், விசாரணையாளர்கள் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ..சுமந்திரன் தெரிவித்தார்.