நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகை

250 0

தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர், சென்னை – நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், இராவணன், சிவக்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் இலங்கையை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு தமிழக மீனவர் விவகாரத்தில் மௌனம் காப்பதாகவும், உடனடியாக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற பதாகைகளையும் நாம் தமிழர் கட்சியினர் கையில் ஏந்தி இருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 300 பேர் கைது செய்யப்பட்டனர்.