குடியேற்றவாசிகள் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்பும்பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களின் சொந்தநாடுகளிற்கே திருப்பி அனுப்பப்படும் ஆபத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
ருவாண்டா திட்டத்தில் உள்ள குறைபாடுகள் திருத்தப்படும் வரை புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவிற்கு அனுப்புவது சட்டவிரோதமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.