டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய முறைமை இன்று அறிமுகமாகிறது!

128 0

டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய முறைமை இன்று திங்கட்கிழமை (28) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் 48, 246 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 10,626 டெங்கு நோயாளர்களும்  கொழும்பு மாவட்டத்தில் 10,316 டெங்கு நோயாளர்களும்  பதிவாகியுள்ளனர்.