பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் நிதி விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்குள் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் நிதி தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
பல்கலைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில் நன்கொடைக்காக பணம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் தலையீட்டின் மூலம் அரசாங்கத்தினால் 3100 லட்சம் ரூபா பணம் மகபொல புலமைப் பரிசில் நிதியத்தில் இருந்து அவ்வாறே மகாபொல புலமைப்பரிசில் நன்கொடைக்காக விநியோகிக்கப்பட்டுள்ளது.
குறித்த பணம் மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்குமான புலமைப்பரிசில் நிதியாக மாணவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு இந்த வாரத்துக்குள் வைப்பிலிடப்படும்.