பொகவந்தலாவையில் பாரியவெள்ளம் வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு பாதிப்பு.

238 0

பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் நேற்று மாலை வேளையில் பெய்தகடும் மழையின் காரானமாக பொகவந்தலாவ கெம்பியன் தோட்டபகுதியில் உள்ள குடியிருப்பகள் மற்றும் விவசாய தோட்டங்கள் பாதிப்படைந்துள்ளதாக கெம்பியன் தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தோட்டபகுதியில் சுமார் 12 குடியிருப்பகளை சேர்ந்த 60 பேர் பாதிக்கபட்டுள்ளதாகவும் சுமார் நான்காயிரம் கிலோ மரக்கரிகளும் வெள்ள நீரினால் பாதிப்படைந்தள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கபட்ட 12 குடும்பங்களை சேர்ந்த 60 பேர் கெம்பியன் தோட்டத்தில் உள்ள அயல்வீடுகளில் தங்க வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை பாதிக்கபட்ட மக்களுக்கான நிவாரனங்களை தோட்டநிர்வாகம் வழங்கிவருகின்றது.

இதனிடையே, கெம்பியன் தோட்டத்தில் உள்ள பாலம் ஒன்றும் வெள்ள நீரினால் அடித்து செல்லபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.