“பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்” – வடக்கு மாகாண சபை

682 0

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தோடு, மாணவர்களின் ஆதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் நடத்த வேண்டும் என்றும் வடக்கு மாகாண சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா உள்ளிட்டோரின் கையெழுத்தோடு இன்று வடக்கு மாகாண சபை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

NP-Statement1