அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

97 0
குற்றச் செயலில் ஈடுபடுவதற்காக மறைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வகையில் பண்டாரகம குங்கமுவ பிரதேசத்தில் உள்ள  பாழடைந்த  அறையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலான மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் வெடிபொருட்களுக்கான உரிமம் எதுவும் இல்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

6 டெட்டனேட்டர்கள், 6 கிலோ 800 கிராம் அம்மோனியா நைட்ரேட்,  ஜெல்  ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.