பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்!

85 0

ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.

லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.

உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.

தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.