நெல் கொள்முதலில் கார்ப்பரேட்டுகள்: விவசாயிகள் எதிர்ப்பு

76 0

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் நேற்று கூறியது: தமிழகத்தில் 6 இடங்களில் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் விருப்பத்துக்கேற்ப ராட்சத அரைவை ஆலைகளை நிறுவி, தாங்களே நேரடியாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்து, அரைத்து, அரிசியாக விநியோகம் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. இதற்காக, 15 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

இது, கண்டிக்கத்தக்கது. இதை கைவிட வேண்டும். கொள்முதலிலும், வணிகத்திலும் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பதால், விவசாயிகள், வணிகர்கள், ஆலை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர் என்றார்.