கிளிநொச்சி நீதிமன்றத்தினால் மணல் ஏல விற்பனை

69 0

கிளிநாச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் மணல் ஏல விற்பனை மேற்கொள்ளப்பட உள்ளதாக நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் (23.06.2023) ஆம் திகதி காலை 9 மணிக்கு ஏலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட மணல் இவ்வாறு ஏலத்தில் விடப்படுகின்றது.

மேலும் குறித்த மணலை ஏல விற்பனை ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர் பார்வையிட முடியும் என பதிவாளர் தெரிவித்துள்ளார்.