வவுனியா டிப்பர் மோதி விபத்து ; தாயும் மகளும் பலி!

59 0

வவுனியா கண்ணாட்டி பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (16)  டிப்பர் வாகனம் ஒன்று மோதி தாயும் மகளும் உயிரிழந்துள்ளார்கள்.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இன்றைய தினம் காலை வவுனியா நகர் நோக்கி பாடசாலை செல்வதற்காக பேருந்தை எதிர்நோக்கி காத்திருந்த நிலையில்,  தாய் மற்றும்  மகள் மீது வேகக்கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய தாய் மற்றும் அவரது 6 வயதுடைய மகள் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஸ்தலத்திற்கு வந்த பொலிஸார் டிப்பர் சாரதியை கைது செய்திருந்ததுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.