சிகிச்சைக்குச் சென்ற பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வைத்தியர்

75 0

கம்பஹா மாவட்டத்தின் சியம்பலாபே  பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்ற  42  வயதுடைய பெண்ணை  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக்  கூறப்படும் வைத்தியரை கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தப் பெண் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், குறித்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய வைத்தியரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் கூறினார்.