கட்டணத்தை செலுத்தாதவரின் குடிநீர் விநியோகத்தை துண்டித்த ஊழியர் மீது தங்காலையில் தாக்குதல்!

68 0

தங்காலை தங்கெட்டிய வீர மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கான குழாய் குடிநீர் விநியோகத்தை துண்டித்த தங்காலை நீர் வழங்கல் சபையின் ஊழியர் ஒருவர் குறித்த வீட்டில் இருந்த ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதாக தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை நீர் வழங்கல் சபையின் ஊழியரான  சிறிசாந்த என்பவரே தாக்குதலுக்குள்ளாகி தங்காலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தங்காலை பிரதேசத்தில் நீர் கட்டணம் செலுத்தாதவர்களின் நீர் இணைப்பை துண்டிக்க தங்காலை நீர் வழங்கல் சபையின்  உத்தியோகத்தர் உள்ளிட்ட ஊழியர்கள் சென்றபோதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.