மன்னார், பூநகரியில் காற்றாலை மின் திட்டப் பணிகள் :அமைச்சர் காஞ்சன

163 0

இந்தியாவின் அதானி நிறுவனம் வடக்கு மாகாணத்தில் மன்னார், பூநகரியில் அமைக்கவுள்ள காற்றாலை மின் சக்தி திட்டப் பணிகள் 2024 டிசெம்பருக்கு முன்னர் நிறைவேறும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், இந்தத் திட்டத்துக்கு மன்னாரிலும் பூநகரியிலும் மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.

பூநகரியில் காற்றாலை மின் திட்டப் பணிகளை தொடங்க கடந்த ஓகஸ்ட் மாதமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் 286 மெகாவாட் , பூநகரியில் 234 மெகாவாட் என 500 மெகாவாட் மின்சாரம் இந்தத் திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த இருதிட்டங்களுக்காகவும் அதானி நிறுவனம் 50 கோடி டொலர்களை முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.