சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பாடு

211 0

கல்வித்துறையில் தேர்ச்சிபெற்ற தன்னம்பிக்கையுள்ள சிறந்த இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்பவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

சிறந்த ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்குவதற்கு தேவையான வழிகாட்டலை தற்போது அரசாங்கம் மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டின் இளைஞர் தலைமுறையை கட்டியெழுப்புவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.

இதேவேளை, போதைப்பொருளிலிருந்து விடுதலைபெற்ற இளைஞர் தலைமுறையை உருவாக்குவதற்காக தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.