தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

97 0

தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரை வெட்டிய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.