வயலை பார்வையிடச் சென்ற பிரதேசவாசிகள் உயிரிழந்த நிலையில் உள்ள யானையை அடையாளம் கண்டு, கிராம சேவகர் ஊடாக ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு பிரதேசவாசிகள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்தது ஒரு பெண் யானை, அது 30 – 35 வயதுடையது எனவும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியே இந்த யானை உயிரிழந்துள்ளது எனவும் ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்த யானையின் உடற்கூற்று பரிசோதனைகள் நேற்று (10) மாலை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்திய அதிகாரி முன்னிலையில் இடம்பெறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.