வீடொன்றினுள் புகுந்து நகை, பணம், கையடக்கத்தொலைபேசியை கொள்ளையடித்துச் சென்ற குழு

61 0

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொற்றாண்ட குளம் பகுதியில் வெள்ளிக்கிழமை (9) வீடொன்றினுள் புகுந்த சிலர் நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

நேற்று நள்ளிரவு பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி கொற்றாண்ட குளம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உட்சென்ற 6 பேரைக் கொண்ட கும்பலொன்று, வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு நகை, பணம் மற்றும் கைத்தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.