சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை சிஐடியினர் முன்னிலையில் ஆஜராக உத்தரவு

93 0
image

சமூக அரசியல் செயற்பாட்டாளர் பிரசாத்வெலிக்கும்புரவை  13 ம் திகதி  சிஐடியின் முன்னிலையில் விசாரணைக்காக ஆஜராகுமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அவர்கள் மாணவர் இயக்கத்தின் மீது ஒடுக்குமுறையை ஆரம்பித்தவேளை ரணில்ராஜபக்ச அரசாங்கம் எங்கள் ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.

நேற்று நான் 13ம் திகதி சிஐடியினர் முன்னிலையில் ஆஜராகவேண்டுமென உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு உத்தரவு கிடைத்துள்ளவர்களில் நானும் ஒருவன்.

கருத்துசுதந்திரம் பேச்சுசுதந்திரம் ஆகியவற்றை பாதுகாக்கவேண்டுமென்றால் அதன் தேவையை உணர்ந்துள்ள அனைவரும் ஒன்றுபடவேண்டும்.

தற்போதைய ஒடுக்குமுறை அரசாங்கம் -அமைப்புமுறைக்கு எதிராக குரல் எழுப்புபவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நீங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு நீண்டநாட்களாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்