உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை தமிழர் பேரவை ஆதரிக்காது

60 0

புலம்பெயர் தேசங்களில் இயங்கிவரும் சக்திவாய்ந்த எந்தவொரு தமிழர் அமைப்பும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஆதரிக்காது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

எனவே புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகக் கூறுகின்ற அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அந்த அமைப்புக்களின் விபரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நீதி விசாரணைப்பொறிமுறையை நோக்கிய தமது முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலேயே இலங்கை அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.