ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையில் நேற்று உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி வரவேற்றுள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் நல்லிணக்கம் பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க குறித்த தீர்மானம் முழுமையாகவும் – உரிய காலத்துடனும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அதன் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

