பிரித்தானியாவில் ஈழத் தமிழர் மீது இனவெறித் தாக்குதல்

348 0

பிரித்தானியாவின் நோரிஸ் க்ரீன் பிரதேசத்தில் ஈழத் தமிழர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்பார், மூன்று பாடசாலை மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல்தாரிகள் 15 மற்றும் 16 வயதுகளை உடையவர்கள்.

இலங்கையரான அவரை நாட்டில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்தபடியே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் நோக்கம் இனவாதமானது என்று, குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றிய பிரித்தானிய விவாகரத்து தீர்மானத்தை அடுத்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அகதிகளுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.