பொதுத் தேர்தலுக்கு பின்னர் சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை

216 0

பொதுத் தேர்தலுக்கு பின்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகராக கடமைகளை ஆரம்பித்த தான் மிகவும் சுயாதீனமாக செயற்படுவதாகவும் அவர் இன்று நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் டளஸ் அழகப்பெரும வெளியிட்ட கருத்துக்களுக்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் மனசாட்சிக்கு இணங்கவே தான் இந்த பதவியில் கடமையாற்றுவதாகவும் கூறியுள்ளார்.