யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள்(காணொளி)

286 0

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் வயலொன்றிலிருந்து அநாதரவான நிலையில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி சோலைஅம்மன் ஆலயத்திற்கு அருகிலுள்ள வயலில் 250 கிலோ கஞ்சா பொதிகள் சாவகச்சேரி பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றிரவு 10 மணிக்கு கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.