யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம்(காணொளி)

369 0

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தினால் அ.குமாரசுவாமிப் புலவர் நினைவரங்கம் இன்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியும் இணைந்து நடாத்திய நினைவரங்க நிகழ்வு பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் வரவேற்புரையினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைப்பதிவாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார்.

வாழ்த்துரைகளை சுன்னாகம் இந்துக்கல்லூரியின் அதிபர் மு.செல்வஸ்தான் ஆற்றியதோடு, ஈழத்து மரபவழி புலமைத்துவமும், சுன்னாகம் அ.குமாரசுவாமிப்புலவரும் எனும் தலைப்பில் சைவப்புலவர் கு.றஜீபனின் நினைவுப்பேருரையும் இடம்பெற்றது.

அத்துடன் கல்லூரி மாணவிகளின் ஆடல் அளிக்கையும் இடம்பெற்றது.

இன்றைய நிகழ்வில் பேராசிரியர் சண்முகதாஸ், கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் எஸ்.லலீசன், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.