திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும்- கிராமமக்கள்(காணொளி)

264 0

மன்னார் திருக்கேதீஸ்வரம்சிவபுரம் கிராம மக்களுக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் அமைத்துத்தரவேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடம்பெயர்ந்து மீள்குடியேறிய சிவபுரம் கிராம மக்களுக்குரிய நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படாமையால் தற்போது தற்காலிக ஓலைக்குடிசைகளிலம் தகரக்கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்ற காரணத்தினால் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருக்கேதீஸ்வரம் சிவபுரம் கிராமத்தில் இதுவரை 6 குடும்பங்கள் மாத்திரம் நிரந்தர வீடுகளைப் பெற்றுள்ளனர்.