போலி நாணயத்தாள்களுடன் சிக்கிய நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி

77 0

போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நிறைவேற்று தர கணக்காய்வு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வெல்லவ பிரதேசத்தில் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாளை வழங்கி வர்த்தக நிலையமொன்றில் பொருட்களைக் கொள்வனவு செய்ய முற்பட்டுள்ளார்.

இதன் போது குறித்த வர்த்தக நிலையத்திலிருந்த வர்த்தகருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர் பொலிஸாரிடம் முறைப்பாடளித்துள்ளார். அதற்கமையவே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசிக்கும் கும்புக்வெவ சிங்கராஜா பிரதேசத்தில் உள்ள வீட்டைச் சோதனையிட்ட போது, குறித்த வீட்டிலிருந்து மேலும் போலி நாணயத்தாள்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வடமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தினுடைய ஆலோசனைக்கமைய வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.