எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிப்பு

59 0
எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால், தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில், எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க சப்புகஸ்கந்த  மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.