மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய தட்தோனந்தம் கிரிசாந்த் காணாமல் போயுள்ளார்!

464 0

DSC_0344மட்டக்களப்பு இருதயபுரம் மேற்கு கிராமத்தை சேர்ந்த திருமதி . தட்தோனந்தம் தங்கேஸ்வரி என்பவரின் மகன் திங்கட்கிழமை காலை முதல் காணாமல் போயுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார்.மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட இருதயபுரம் மேற்கு கிராமத்தின் இலக்கம் 29, நான்காம் குறுக்கை சேர்ந்த தட்தோனந்தம் கிரிசாந்த் ( சாந்தன் ) 19 வயதுடைய தனது மகன் நேற்று காலை முதல் வீட்டில் இருந்த நிலையில் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவரின் தாயார் தெரிவிக்கின்றார் .

குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 077 95 89 551 என்ற தொலை பேசி இலக்கத்திற்கும் அல்லது 065 222 44 23 என்ற மட்டக்களப்பு பொலிஸ் நிலைய இலக்கத்திற்கும் அறிவிக்குமாறு தெரிவிக்கின்றனர் .DSC_0351